சுவிட்சர்லாந்து அரசு, இலங்கை பவர் நிறுவனம் மற்றும் தேசிய இளைஞர் படையணி ஒன்றிணைந்து தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையங்களில் நடத்தப்பட்ட SSG (Skills for Sastainable Growth) Hospitality operations certificate நிகழ்சித் திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்த இளைஞர் படையணி பயிலுனர்கள் 175 பேருக்கு சான்றிதழ் வழங்குதல் ஜூன் மாதம் 09 ஆம் திகதி SEDEC கெரிடாஸ் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா, மாலை தீவு மற்றும் சுவிட்சர்லாந்து தூதராலயத்தின் முதலாம் செயலாளர் (மய்கேசன் ) டொரிஸ் மனோர் அம்மையார், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் அருண பண்டார அவர்களின் தலைமையின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் காமினி விக்ரமபால அவர்கள், மேலதிக பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி) சமன் குலசூரிய அவர்கள், உதவிப் பணிப்பாளர் (அபிவிருத்தி) திருமதி இனோகா குனவர்தன மற்றும் அலுவலர்கள் பிரிவினரும் பங்கு பற்றினர்.