Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

இன்னுமொரு “செனெஹெ பியஸ” வீடொன்று நன்கொடை செய்யப்பட்டுள்ளது …

தேசிய இளைஞர் படையணி மூலம் செயற்படுத்தப்படுகின்ற   “செனெஹெ பியஸ” வீட்டுக் கருத்திட்டத்தின் கீழ்   இளைஞர் படையணி பயிற்சி நிலையங்கள் 58  ஊடாக  வீடு கனவாக காணப்படும் குறைந்த வருமானம் பெறும்  58 குடும்பங்களுக்கு வீடு அமைத்துக்கொடுக்கும் சிறப்பான பணியில் கலிகமுவ தேசிய இளைஞர் படையணி நிலையத்தின் மூலம் 30 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு , பலபத்தாவ போயகம எம் .ஏ.டப்.ஜே. மஞ்சநாயக அவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு மிக கோலாகலமாக 2022.09.07  ஆம் தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர், மேலதிக பணிப்பாளர், சபரகமுவ மாகாண பணிப்பாளர், கலிகமுவ பிரேதேச செயலக பிரதிநிதிகள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சபரகமுவ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி  அனைத்து நிலையப் பொறுப்பதிகாரிகளும் பங்கேற்றனர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button