Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

6 ஆவது சர்வதேச தன்னார்வ தின CERT சவால் பாகிஸ்தான் லாகூரில்

6 ஆவது சர்வதேச தன்னார்வ தின CERT சவால் 2022 டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பாகிஸ்தான் லாகூரில் அவசர சேவைகள் எகடமியில் இடம்பெற்றது . இந்நிகழ்வுக்கு இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசின்ஹ அவர்கள் உள்ளிட்ட இலங்கை அணி 2022.12.05 ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர் .

இலங்கை அணி, சார்க் வலயத்தின் அணி உள்ளிட்ட 56 அணிகள் இப்போட்டித் தொடரில் பங்குபற்றினர். இலங்கை அணிக்கு பீ.ஆர்.கே. தி சில்வா மற்றும் வீ.எஸ். விதானபத்திரன ஆகிய அதிகாரிகள் இருவரும் தேசிய இளைஞர் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றியதுடன் அதன் தலைமைத்துவத்தை தேசிய இளைஞர் படையணியின் பீ.ஆர்.கே. தி சில்வாவால் வகிக்கப்பட்டது. அங்கு சர்வதேச பங்குபற்றுதல் கிண்ணமொன்று இலங்கை அணிக்கு கிடைத்தது .

அவ்விரு அதிகாரிகள் உள்ளிட்ட அணியினருக்கு தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர், பணிப்பாளர் சபை மற்றும் பணிக்குழாமினரின் வாழ்த்துக்கள்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button