Register Now

பணிப்பாளரின் ஆசிச் செய்தி

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.எம்.எஸ்.பி ரத்நாயக்க USP  psc  IG – அவர்களது செய்தி

 தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் என்ற முறையில் இணையதளம் சார்பில் செய்தி வெளியிடப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய இளைஞர் படையணி 20 வருடங்கள் பூராக தலைமைத்துவ குணாதிசயங்களுடன் மற்றும் சிறந்த ஆளுமை பண்புமிக்க திறன்களுடன் கூடிய இளைஞர் சமூகத்தை நாட்டிற்கு வழங்கும் முகமாக மேற்கொள்கின்ற பணி எங்கள் அனைவரதும் பெருமைக்குரிய விடயம் என்பதனை நான் அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றேன்.

இளைஞர் படையணி ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அத்தியாவசிய காரணமாக காணப்பட்ட இளைஞர் சமூகத்தை நேர்மறையான எண்ணக்கருக்களால் மற்றும் தொழில் திறன்களால் வலுவூட்டுவதன் மூலம் தேசிய அபிவிருத்தி முன்னெடுப்பில் பங்காற்ற வைக்கும் இலக்குக்குள்ளான பணியை தற்காலத்திலும் அவ்வாறே எங்கள் மீது சாட்டப்பட்டுள்ளது டன், அன்றையை விட இன்று தேசிய இளைஞர் படையணி  எதிர்பார்த்த பெறுபேறுகளை தேசத்துக்கு வழங்க வேண்டிய காலம் எழுந்து விட்டது என நான் நம்புகின்றேன்.

மேற்கூறப்பட்ட நோக்கங்களை அடைந்து கொள்ளும் முகமாக வலுவான ஊழியர் படையொன்றை நாட்டிற்கு தேவையாகும். ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் ஆளுமையுடன் கூடிய வலுவான ஊழியர் படையொன்றை கட்டி எழுப்புவதற்கு தேசிய இளைஞர் படையணிக்கு உள்ள இயலுமை, கடமை மற்றும் பொறுப்பை சுலபமாக கருத முடியாது.

 வாழ்க்கைச் திறன்கள்  அல்லது தொழில் மீது அடிப்படையாகக் கொண்ட திறன்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக அல்லாது உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு விசேட தகமைகளாக கருதப்படும் ஆங்கில மொழி அல்லது வேறு வெளிநாட்டு மொழி திறன், தகவல் தொழில்நுட்ப திறன் ஆகிய துணைப் பாடங்களின்  மூலம் இளைஞர் சமூகத்தை வலுவூட்டுவதற்கு தேசிய இளைஞர் படையணிக்கு ஆற்றல் கிடைத்துள்ளதுடன், அதற்காக சரியான திட்டமிடல் மற்றும் இலக்குகளுடன் கூடிய நோக்கங்களுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இளைஞர் சமூகத்தை வலுவூட்டும் குறிக்கப்பட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் தேசிய குறிக்கோள்களை வெற்றி பெறச் செய்வதற்கு தேசிய இளைஞர் படையணியின் பங்களிப்பு தயக்கம் இல்லாமல் மற்றும் வினைத்திறனுடன் நாட்டிற்கு வழங்குவதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றாக அர்ப்பணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

 அதற்காக ஒரு மனதுடன் கருமமாற்ற தேவையான சக்தி, தைரியம் குறைவில்லாமல்  கிடைக்க வேண்டும் என்று நான் பிரார்த்திப்பதுடன், எதிர்பார்க்கப்படும் எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தையும் மிக வெற்றிகரமான முறையில் அடைந்து கொள்ள உங்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும் என பிரார்த்தனை செய்கின்றேன்

பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக யூஎஸ்பீ பீஎஸ்சி ஐஜீ

பணிப்பாளர்

தேசிய இளைஞர் படையணி

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button