Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தேசிய இளைஞர் படையணி பயிலுனர்கள் வெளிநாடு பயணமாகினர் .

தேசிய இளைஞர் படையணி பயிலுனர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு   அனுப்பும் கருத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற    பயிலுனர்களின் இரண்டாம் அணி 2022 ஆகஸ்ட் மாதம்  16 ஆம் திகதி வெளிநாடு பயணமாகினர் .   வெளிநாடு செல்ல முன்னர் பயிலுனர்களுக்கு சிரேஷ்ட ஆலோசகர்களின் கீழ் மூன்று மாத முழு நேர வாழ்க்கை திறன் மற்றும் தொழில் பயிற்சியொன்று வழங்கப்பட்டது . பயிற்சி ஆரம்பித்தது முதல் அவர்கள் வெளிநாடு செல்லும் வரையான அனைத்து செலவுகளையும் தேசிய இளைஞர் படையணி செலவிட்டது. இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அதன் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்சிக்கு பங்களிப்பை வழங்குதல் தேசிய இளைஞர் படையணியின்  நோக்கமாகும்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button