Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

இளைஞர் படையணி புதிய பணிப்பாளர் புது வருடத்தில் சுப முகூர்த்தத்தில் பணிகளை பொறுப்பேற்றார் …

விளையாட்டு மற்றும் இளைஞர்  விவகார அமைச்சின் கீழ் செயற்படும் முன்னணி இளைஞர்  ஆளுமை அபிவிருத்தி அரச நிறுவனமாக கருதப்படும் தேசிய இளைஞர் படையணியின் 13  ஆவது பணிப்பாளராக  கேர்ணல் ஆர்.எம்.எஸ்.பீ. ரத்நாயக யூஎஸ்பீ  பீஎஸ்சி ஐஜீ   அவர்கள் இன்றைய தினம் (17) , பிரித் ஒதுதளுக்கு மத்தியில் சுப முகூர்த்தத்தில் பணிகளை ஆரம்பித்தார். 

2002  ஆம் ஆண்டில் இளைஞர்  படையணியை  ஆரம்பிக்கும் போது பிரதான நோக்கமாக அமைந்த இளைஞர்  சமூகத்தை நேர்மறையான எண்ணக்கருக்களால் மற்றும் தொழில் திறன்களால் வலுவூட்டி  தேசிய அபிவிருத்தி முன்னெடுப்பிற்கு   பங்களிப்பு செய்யும் வகிபாகத்தை சமகாலத்திற்கு மாற்றமில்லாமல் அவ்வாறே ஒதுக்கப்பட்டுள்ளதுடன் , அன்றையை விட இப்போது தேசிய இளைஞர்  படையணி மூலம் எதிர்பார்க்கப்படும் வகிபாகம் நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய காலம் இந்த தருணம் என்பதுடன் , அதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட  வேண்டும் என புதிய பணிப்பாளர் பணிகளை ஆரம்பிக்கும் போது கூறினார் .

நிகழ்விற்கு மேலதிக பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள், மாகாண பணிப்பாளர்கள், தலைமைக் காரியாலய அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பங்குபற்றினர் .

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button