Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தேசிய இளைஞர் படையணியின் ஹோட்டல் பயிற்சி பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவம் மிக வெற்றிகரமாக நடைபெற்றது

தேசிய இளைஞர் படையணியின் ஹோட்டல் பயிற்சி பாடசாலையின் 2024 முதலாம் அணியின் சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 17 ஆம் திகதி , நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அவர்களின் தலைமையில் தம்புள்ளையில் மிகவும் கோலாகலமான முறையில் நடைபெற்றது.

தொழில்முறை சமையலாளர், பேஸ்ட்ரி மற்றும் பேக்கரி, உணவு உதவியாளர், வரவேற்பு துறை,வீட்டு பராமரிப்பாளர் மற்றும் உதவி பங்களா பொறுப்பாளர் ஆகிய பாடநெறிகளை வெற்றிகரமாக முடித்த பயிலுனர்கள் 220 பேருக்கு இங்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு விளையாட்டு மட்டும் இளைஞர் விவகார அமைச்சின் அதிகாரிகள் தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர் சதுரங்க உடவத்த அவர்கள், சபையின் அதிகாரிகள் , தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் சுஜீவ ரத்னாயக்க யுஎஸ்பி பிஎஸ்சி ஐஜி, தேசிய இளைஞர் படையணி பணிப்பாளர் சபை, மாகாண பணிப்பாளர்கள், ஹோட்டல் உரிமையாளர் சங்க அதிகாரிகள், நிலைய பொறுப்பதிகாரிகள் , ஆலோசர்கள் மற்றும் பெற்றோர்கள் பயிலுனர்கள் உள்ளிட்டவர்கள் பங்கு பற்றினர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button