தேசிய இளைஞர் படையணி மற்றும் பாரிஸ்டா கோபி லங்கா நிறுவனம் இணைந்து நடத்தும் பாரிஸ்டா தொழிற்பயிற்சிபாடநெறியை (Barista Training Programme) ஆரம்பித்து வைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு கையொப்பமிடல் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி, தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் காமிணி விக்ரமபால அவர்கள் மற்றும் பாரிஸ்டா கோபி லங்கா நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி/ பணிப்பாளர் தினுப பத்திரன அவர்களிடையே தேசிய இளைஞர் படையணி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு கையொப்பமிடும் நிகழ்வுக்கு தேசிய இளைஞர் படைணியின் மேலதிக பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி) சமன் குலசூரிய அவர்கள், மேலதிக பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் நிதி) சட்டத்தரணி நிஷாந்த புஷ்பகுமார அவர்கள் உள்ளிட்ட தலைமை அலுவலக அலுவலர்கள், பாரிஸ்டா கோபி லங்கா நிறுவனத்தின் மனித வள மற்றும் நிர்வாக துறை பிரதானி ஹர்ஷ சாணக்க அவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கு பங்குபற்றினர்.