Register Now

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளரின் செய்தி…

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய இளைஞர் படையணி,ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் ஆளுமை ஆகிய முப்பெரும் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் இளைஞர்களுக்காக செயல்பட்டு வரும் அரச நிறுவனமாகும். அந்நிறுவனத்தின் இணையதளத்திற்கு செய்தியொன்றை விடுக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திறன்களுடன் கூடிய இளைஞரை உருவாக்கும் நோக்கில் மென்திறன் மற்றும் ஆளுமை விருத்தி அடிப்படை பாடநெறிகள் போன்றே ,எதிர்கால தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு தொழிற் கல்வி பாடநெறிகளுக்கு புலமைப் பரிசில்களை வழங்கி தேசிய இளைஞர் படையணி ஆற்றிவரும் பணிப்பொறுப்பை நான் பாராட்டுகின்றேன். அத்துடன் சமூகத்திற்காக மொழி விருத்தி பாடநெறிகள்,விளையாட்டு திறன்கள் விருத்தி நிகழ்ச்சி திட்டங்கள் ,அழகியல் கலை பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் ஆகிய புதிய பாடநெறிகள் மற்றும் நிகழ்ச்சி திட்டங்களை அறிமுகம் செய்து தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகாரம்மிக்க மதிப்பீட்டு திறன் சான்றிதழ்களை வழங்கி அவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து வரும் தேசிய இளைஞர் படையணி இளைஞர் சமூகத்திற்கு தனது வாழ்க்கை பாதையை மாற்றிக் கொள்வதற்கு வழி காட்டும்.

இருபது வருடம் போன்ற ஒரு குறுகிய கால வரலாற்றைக் கொண்ட நிறுவனமாக இருந்தாலும் கூட நிறுவன ரீதியில் பல வெற்றிகளை பதிவு செய்து முன்னோக்கிச் செல்கின்ற தேசிய இளைஞர் படையணியின் எதிர்காலப் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக பாராட்டுகின்றேன்.

செயலாளர் .

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button