தேசிய இளைஞர் படையணி என்பது இலங்கையின் இளம் தலைமுறையினரின் மற்றும் இலங்கையின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் உன்னதமான பணிப் பொறுப்பொன்றை செய்யக்கூடடிய நிறுவனம் ஆகும் என்பது எனது நம்பிக்கையாகும்.இரண்டு தசாப்தங்களுக்கு அதிக காலமாக தேசிய இளைஞர் படையணியால் மேற்கொள்ளப்பட்ட பணியை பாராட்ட இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறேன்.
“ வளமான நாடு அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளின் ஊடாக எங்களால் கட்டியெழுப்ப எதிர்ப்பார்க்கப்படும் மறுமலர்ச்சி யுகத்தில், இளைஞர்களை கட்டியெழுப்புவதில் ஒரு அஸ்திவாரமாக அமைவது தேசிய இளைஞர் படையணியாகும். விசேடமாக மக்களால் எங்களுக்கு வழங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மக்கள் ஆணையில் தீவிர பங்களிப்பை இளம் தலைமுறையினர் மேற்கொண்டனர். அதற்கமைய எமது நாட்டின் ஜனத்தொகையில் 83 இலட்சம் ஆன இளம் சமூகத்தினர் நம்பிய பிரகாரம் அவர்களின் கனவை நனவாக்கி பூமியில் விதைப்பதற்கு எமக்கு மிகப்பெரிய பணிப் பொறுப்பு உள்ளது.
அந்த இலக்கை அடைந்து கொள்ளத் தேவையான வழிகாட்டுதல் எமது இளைஞர் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிராமிய மற்றும் நகர்ப்புற இளைஞர்களை கட்டியெழுப்புவதற்கு அந்த கொள்கை பிரகடனத்தில் பல அடிப்படை கூறுகள் உள்ளன.V4R டிஜிட்டல் வாய்ப்புக்கள்,Youth app, பல்நோக்கு நிலையங்கள், மாலை நேர ITE, ஆகியவை முக்கியமானவை ஆகும். இந்த அடிப்படை கூறுகளை இலங்கை முழுவதிலும் உள்ள இளைஞர் சமூகத்திற்கு எதுவித பாகுபாடும் இன்றி செயல்படுத்தக்கூடிய நிறுவனமாக தேசிய இளைஞர் படையணிக்கு தனித்துவமான பணிப் பொறுப்பை உள்ளது.
எமது குறிக்கோளாக அமைவது தேசிய இளைஞர் படையணி மேலும் இளைஞர்களுக்காக காணப்படும் வெறும் நிறுவனமாக அல்லாமல் அதனை இளைஞர் சமூகத்திற்கான இடமாக மாற்றுவதாகும். அதற்கமைய அரசியல் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார துறைகளில் தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டிற்கு தீவிரமாக பங்களிக்கும் மறுமலர்ச்சியின் முன்னோடிகளாக புது உலகை வென்ற இளம் தலைமுறையை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்.
வெற்றி!
இளைஞர் விவகார பிரதி அமைச்சர்