தேசிய இளைஞர் படையணி இந்த மிக முக்கியம் வாய்ந்த விடயத்தை மேற்கொள்வதற்காக தெரிவு செய்துள்ள அடிப்படை தந்திரோபாய நுழைவாவது இளைஞர்களை வாழ்க்கை திறன்களுடன் தொடர்பு படுத்துவதாகும். வாழ்க்கைத் திறன்களுடன் போசிக்கப்பட்ட இளைஞன் முதலில் தன் மீது அன்பு காட்டுவான். நாட்டின் மீது அன்பு காட்டுவான். அன்பின் மூலம் தோன்றக்கூடிய வேகம் சரியான வாழ்க்கை நாகரீகத்திற்கு நெறிப்படுத்தும். வாழ்க்கை நாகரீகம் இளைஞர்களை வளப்படுத்தி நாட்டை வளப்படுத்தும்.
தேசிய இளைஞர் படையணி இளைஞர்களுள் வாழ்க்கைத்திறன் விருத்தி மூலம் ” பொருளாதார மனிதனை” நாட்டுக்காக கட்டியெழுப்புவதற்கு தேவையான இளைஞர் திறன்கள் மற்றும் ரசனைக்கு ஏற்ற தொழிற் திறன்களை கட்டியெழுப்புவதற்கு பல பங்குதாரர்களை ஒருங்கிணைப்பு செய்யும். தொழில் திறன்களை பெற்றவரை விட ஒழுக்கமுள்ள, சிறந்த ஆளுமை மிக்க மற்றும் தலைமைத்துவத்துடன் கூடிய தொழில் நிபுணரிடமிருந்து தோன்றக்கூடிய வினைத்திறன் மற்றும் உற்பத்தி திறன் உயர்ந்த மட்டத்தில் காணப்படும். பல நிறுவனங்களின் வெற்றிக்கு அல்லது தோல்விக்கு காரணமாக அமைவது ஒழுக்கம், ஆளுமை மற்றும் தலைமைத்துவம் என்ற விடயங்களை கணிக்கும் போது தெளிவாகக் கூடிய விடயமாகும். அதனால் தேசிய இளைஞர் படையணி கட்டியெழுப்பும் இளைஞர் தலைமையினர் இலங்கையை புதிய அபிவிருத்தி யுகத்திற்கு எடுத்து செல்லும் என்று சுப செய்தியுடன் நம்பிக்கையையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.