Register Now

NYC E-மின் கடை

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

உங்கள் எதிர்காலத்தை எங்களுடன் முன்னெடுங்கள்

தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான புதிய சவாலுக்கு முகங்கொடுக்க முடியுமான தலைமைத்துவப் பண்புகள் மற்றும் பலம்மிக்க ஆளுமையையும் திறன்களையும் கொண்ட இளைஞர் சமூகத்திற்கு வழிகாட்ட வேண ்டிய சந்தர்ப்பத்தில் 2002 இன் 21 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தினூடாக கருத்திட்டமொன்றாக நிறுவப்பட்டு, 2003 ஒக்தோபர் மாதம் 10 ஆம் திகதி 1309/17 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்குமாறு ‘01- 2003 ஆம் இலக்க இளைஞர் படையணிக்கான கட்டளைகள’ ஊடாக இளைஞர் படையணி நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய இளைஞர் படையணி அரச நிறுவனமொன்றாக 2002 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 17 ஆம் திகதி , ரீ.பீ.ஜாயா மாவத்தையில் ( தற்போதைய) மகாவலி கட்டிடத்தில் கர்னல் சன்ன குணதிலக்க அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. பயிற்சி பெறும் இளைஞர் யுவதிகள் “ரேஞ்சர் தலைவர்கள் (படையணித் தலைவர்கள்)” எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு முதலாவது பாடநெறி எம்பிலிப்பிட்டிய, எரமினியாய , ஹெய்யந்துடுவ மற்றும் ரன்டெம்பே போன்ற 04 ரேஞ்சர் தலைவர்கள் (படையணித் தலைவர்கள்) பயிற்சி முகாம்களில் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாவது பாடநெறியிலிருந்து பயிற்சி பெற்ற இளைஞர் யுவதிகள் “ரேஞ்சர் (படையணி வீரர்) ” என அறிமுகஞ் செய்யப்பட்டு தற்போது நாடு பூராவும் மாவட்டங்கள் உள்ளடக்கப்படும் வகையில் 58 தேசிய இளைஞர் படையணி நிலையங்கள் வரை முறையாக வளர்ச்சியடைந்துள்ளது. ஆரம்பத்தில் ரேஞ்சர் தலைவர்கள் என ஆட்சேர்த்துக்க ொள்ளப்பட்ட சுமார் 100 பேர் தற்போது நாடு பூராவும் காணப்படும் பயிற்சி நிலையங்களில் அணி நடை மற்றும் ஒழுக்க ஆலோசகர்களாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்

தொடங்குவதற்கு எங்கள் நிறுவனத்தில்
ஒன்றைப் பார்வையிடவும்

சான்றுகள்

தேசிய இளைஞர் படையணி பயிலுனராக இணையும் இளைஞர் யுவதிகளுக்கு மிகப் பெறுமதியான பல வரப்பிரசாதங்கள் கிடைக்கின்றன.

  • சீருடை , சப்பாத்து
  • பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற SIBA பல்கலைக்கழகம் மூலம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழிக்காக வழங்கப்படும் சான்றிதழ்
  • காப்புறுதி
மேலும் படிக்கவும்

தேசிய இளைஞர் படையணியின் தூர நோக்கு

ஆசிய  பிராந்தியத்தில்  இளைஞர்களின்  வாழ்க்கைத் திறன்களை  விருத்தி செய்யும்  முன்னணி அரச  நிறுவனமாகத் திகழ்தல். 

தேசிய இளைஞர் படையணியின் செயற்பணி

அறிவு, திறன்கள்  மற்றும்  ஆற்றல்களைக்கொண்ட  முழுமையான  ஒழுக்கம்மிக்க,  சவால்களுக்கு  தயக்கமின்றி  முகங்கொடுக்கும்  பலம்மிக்க  இளைஞர்களை  வாழ்க்கைத்திறன்  விருத்தி  ஊடாக  கட்டியெழுப்புதல்  மற்றும் தொழில்முறை திறனுக்குத் தேவையான  ஆற்றல்களுக்கான  இடைவெளியை   நிரப்புவதனூடாக  இலங்கையின்  அபிவிருத்திக்குப்  பங்களிப்புச் செலுத்தல்.

நோக்கு

உலகளாவிய சமூகத்தோடு இணைந்து செல்லும் அபிமானம்மிக்க, நடுநிலையான
இலங்கையின் இளைய சமுதாயத்தை உருவாக்குதல்.

செயற்பணி

புதிய கலாச்சாரத்திற்கான சமூக அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கிய வண்ணம் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட முன்னணி சேவை வழங்கும் நிறுவனமாக வாழ்க்கைத் திறன்களை சிறப்பாகவும் நிலைபேறாகவும் வழங்கி இலக்கிடப்பட்ட சமுதாயத்தை வலுவூட்டி தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்தல்

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button